×

ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு: சென்னையில் இருந்து ஆய்வு செய்தார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு..!!

சென்னை: ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவை சென்னையில் இருந்தவாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆய்வு செய்கிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த தொகுதி மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மிகவும் எதிர்பார்ப்போடு உள்ள ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆய்வு செய்தார்.

கிட்டத்தட்ட 280க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் வாக்கு மையங்களில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? வாக்குப்பதிவு எவ்வாறு நடைபெற்று வருகிறது? தாமதம் ஏதேனும் ஏற்படுகிறதா? என்பது குறித்து காணொலி வாயிலாக அங்குள்ள பார்வையாளர்களிடம் தேர்தல் ஆணையர் கேட்டு வருகிறார். அதிமுக சார்பில் மை வைப்பது அழிகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாகவும் சத்யபிரதா சாகு அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.

Tags : Erode ,East ,Chief Election Officer ,Satyabrata Saku ,Chennai , Erode Polling, Study, Sathyapratha Saku
× RELATED காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள்...